வவுனியாவில் வெளிச்சம் அறக்கட்டளையால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்!!

251

 
வவுனியா சண்முகானந்தா வித்தியாலயத்தில் தரம் 1 மற்றும் 2ல் கல்விகற்கும் வறிய 25 மாணவர்களுக்கு நேற்று (05.04.2017) வெளிச்சம் அறக்கட்டளையால் ஒருதொகை கற்றல் உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் லம்போதரன் , செயலாளர் தி.கார்த்திக் , பொருளாளர் எஸ்.மேனதாஸ் மற்றும் நிர்வாகசபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துள்ளனர்.

வெளிச்சம் அறக்கட்டளையால் வவுனியா மண்ணில் பல்வேறு திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.