வடமாகாண சபைக்கான கட்டிட நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகும் நிலையில்..!

707

northern_mapவடமாகாண சபைக்கான கட்டிடம் யாழ். கைதடியில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மாகாண சபையின் பிரதம செயலாளர் விஜயலஷ்மி தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபைக்கான கட்டிட நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகும் நிலையில் உள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 10 ம் திகதி கட்டிடத்தை கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது என அவர் மேலும் கூறியுள்ளார்.