என்னை ஜனாதிபதியாக பார்க்க மக்கள் விரும்புகின்றனர் : சஜித் பிரேமதாச!!

456

sajith

என்னை ஜனாதிபதியாக பார்க்கவே மக்கள் விரும்புவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தென் மாகாண முதலமைச்சராக தம்மை பார்க்க மக்கள் விரும்பவில்லை. நாட்டின் ஜனாதிபதியாக என்னை பார்க்கவே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. கட்சியின் மெய்யான பிரச்சினைகளை மூடிமறைத்து என்னை மாகாணசபை ஒன்றிற்கு வரையறுக்க கட்சியைச் சேர்ந்த சிலர் முயற்சிக்கின்றனர்.

கட்சி உறுப்பினர்கள் விரும்பினால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தென் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.