வவுனியா பத்தினியார் மகிளங்குளத்தில் மோட்டார் குண்டு மீட்பு!!

280

வவுனியா பத்தியார் மகிளங்குளத்தில் நேற்று (08.04.2017) மதியம் 12.15 மணியளவில் மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

பத்தினியார் மகிளங்குளத்தில் வசிக்கும் குறித்த வீட்டார் தங்களது வீட்டு வளாகத்தினை துப்பரவு செய்யும்போது மோட்டார் குண்டு ஒன்று இருப்பதை அவதானித்துள்ளனர்.

உடனடியாக வவுனியா வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மோட்டார் குண்டை பார்வையிட்டதுடன் வவுனியா நீதிமன்ற அனுமதியுடன் விஷேட அதிரடிப்படையினரை அழைத்து இன்று (09.04.2017) மோட்டார் குண்டை மீட்டுள்ளனர்.

இம் மோட்டார் குண்டு பாவனைக்கு உகந்தல்ல எனவும் இது இறுதி யுத்தத்தில் போது புதைக்கப்பட்டிருக்கலாம் என விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.