வவுனியாவில் கடும் காற்றுடன் மழை : இரண்டு வீடுகள் முற்றாக சேதம்!!

634

 
வவுனியாவில் இன்று (09.04.2017) மாலை 6 மணியளவில் திடீரென பெய்த கடுங்காற்றுடன் கூடிய மழை காரணமாக வவுனியா தெற்கிலுப்பைக்குளத்தில் இரண்டு வீடுகள் முற்றாக சேதத்திற்குள்ளாகியுள்ளன.

தெற்கிலுப்பைக்குளத்தைச் சேர்ந்த ராமு சாந்தகுமார் மற்றும் க.சிவரசா ஆகியோரின் வீடுகளே அனர்த்தத்தின் காரணமாக சேதமடைந்துள்ளன.

இடியுடன் கூடிய கடுங்காற்றின் காரணமாக கூரைத்தகடுகள் வீசப்பட்ட நிலையில் வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் வீட்டிலுள்ள மிஞ்சிய பொருட்களுடன் இரண்டு குடும்பத்தினரும் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் தெரிவிக்கையில்..

திடீரென வீட்டின் கூரைகள் காற்றில் பறந்து சென்றதால் வீடு உடைந்து உள்ளே விழுந்துவிட்ட நிலையில் வெளியிலும் செல்வதற்குப் பயமாக இருந்தது. குழந்தைகள் அலறியபடி இருந்தனர். உதவி கோரி கூக்குரலிட்டபோதும் கடும் மழை காரணமாக சத்தம் எவருக்கு கேட்கவில்லை.

நான் எனது குழந்தைகளுடன் வீட்டின் கதவுக்குப் பின்னால் ஒழிந்து பாதுகாப்புத்தேடி உயிர் தப்பியுள்ளேன். எனக்கு தலையில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.