வவுனியா சூசைப்பிள்ளையார்குள சந்தியில் அமைந்துள்ள கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவுச்சிலையடியில் கம்பன் நினைவுதினம் இன்று (09.04.2017) காலை 8.30 மணியளவில் தமிழ் மணி அகளங்கள் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் ஜீ.ரிலிங்கநாதன், புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), தமிழ்விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), ஒய்வு பெற்ற பிரதேச செயலாளர் ஜயம்பிள்ளை , வர்த்தர்களாகிய விக்னா, மணியம், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவுச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன் தமிழ்மணி அகளங்கள் கம்பனின் வரலாற்றினை சுருக்கமாக விளக்கினார்.
வவுனியா நகரசபையினரால் நிர்மாணிக்கப்ட்ட இவ்வுருவச் சிலையை அப்போது வவுனியா நகரசபை தலைவராக இருந்த ஜீ.ரி லிங்கநாதன் அவர்களின் அழைப்பின் பேரில் வடக்கு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் க.சபாபதிப்பிள்ளை அவர்களினால் 1998.04.03ம் திகதி திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.