வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டப் பகுதியில் வீடுகட்டாதவர்களின் காணிகள் பறிமுதல்!!

1289

 
ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டப் பகுதியில் அரச உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட காணிகளில் இதுவரை வீடு கட்டாதவர்களின் காணிகள் காணி ஆணையாளர் அறிவித்தபடி பறிமுதல் செய்யப்படும் என்றும் இது இறுதி எச்சரிக்கை என தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வவுனியா கிளை முகாமையாளர் வி.எம்.வி.குருஸ் தெரிவித்துள்ளார்.

2011ம் ஆண்டு காணிகள் அற்ற அரச ஊழியர்கள் 700 பேருக்கு காணிகள் வழங்கப்பட்டு இதுவரை பல அரசஊழியர்கள் இன்னமும் காணிகளில் வீடுகட்டவில்லை. இந்நிலையில் அண்மையில் அரச ஊழியர் வீட்டுதிட்டத்தில் உள்ளவர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டப் பகுதியில் காணிகள் கிடைக்கப்பெற்ற சிற்றூழியர்களுக்கு மானியம் வழங்குவது தொடர்பான அவசர விசேட கலந்துரையாடல் வீடமைப்பு அதிகார சபையினருக்கும் சிற்றூழியர்களுக்குமிடையில் நேற்று (09.04 ஓமந்தை ஸ்ரீநாகபூசனி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

இதில் 190 சிற்றூழியர்களின்காணிகள் உள்ளன. அவர்கள் வீடு கட்டுவதற்கு வசதியில்லாமை தொடர்பாக நாம் அக்கறை கொண்டோம். இவ்விடயத்தை எமது தலைமைக் காரியாலத்திற்கு தெளிவுபடுத்தி நாட்டின் பிரதமரின் விசேட வீடமைப்பு செயற்றிட்டத்தின் கீழ் 5 இலட்சம் மானியம் வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 11ம் திகதி 190 காணிகளில் வீடுகட்ட அடிக்கல் நாட்டப்படும். எதிர்வரும் ஆவணி 15ம் திகதி முமுமையாக வீடுகட்டி முடிக்க வேண்டும். இவ் வீட்டுத்திட்டத்திற்கான மாதிரி வரைபடம் எமது அலுவலகத்தில் நாளைமுதல் பெற்றுக்கொள்ளமுடியும்.. (செவ்வாய்) .

இனியும் வீடுகட்ட முன்வராதவர்களின் காணிகள் இரத்தாகிவிடும். இந்த 190 காணிகள் போக மிகுதி காணிகளில் வீடு கட்டாத அரச ஊழியர்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்க எமது வீடமைப்பு அதிகாரசபை உத்தேசித்து வருகின்றனர்.

எனவே அவர்கள் தமது காணிகளை துப்பரவு செய்யும்படியும் காணிகள் தேவையில்லையெனில் எமக்கு தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொள்கின்றேன்.

இதுவரை ஓமந்தை அரசஊழியர் வீட்டுத்திட்டத்தில் காணிகளைப் பெற்றுக்கொண்ட ஓமந்தை அரசஊழியர்கள் வீட்டுத்திட்ட பகுதியில் காணிகளை பெற்ற அரசஊழியர்கள் அரச அதிகாரிகள் உட்பட பலஅரச உத்தியோகத்தர்கள் 4 ஆண்டுகளாயும் வீடுகட்ட முன்வராமையினால் அவர்களின் காணிகளை இரத்து செய்து வேறு காணிகள் அற்ற அரச உத்தியோகத்தருக்கு காணிகள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்குமாகாண காணி ஆணையாளர் எமக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். எனவே விரைவில் அந்நடிவடிக்கை முன்னெடுப்பதற்கு முன் காணிகளில் வீடுகட்டவேண்டும் என்பது எனது விருப்பாகும்.

இந்த நாட்டில் எங்கும் இல்லாத முன்மாதிரிவீடமைப்பு செயல்பாடு ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்திலே உள்ளது. உங்களுக்கான வீதி உட்பட அணைத்து அடிப்படைவசதிகளையும் நாம் செய்து தருவோம்.

நீங்கள் வீட்டை கட்டவேண்டும். உங்கள் காணிகளை பற்றைகளாக வைத்திருப்பது அநாகரீகமானது. இதில் பல உயர் அதிகாரிகளும் அடங்குகின்றனர்.

இந்த வீடமைப்புத் திட்டத்தை நாம் சரிவர செய்யாவிட்டால் நான் உட்பட வீடமைப்பு அதிகாரசபையில் உள்ள அணைத்து உத்தியோகத்தர்களும் நெருக்கடிகளை சந்திப்போம். நான் இராஜிநாமா செய்வேன். எனவே உங்களுக்கு கிடைத்த அரிய வாய்பை தவறவிடாதீர்கள்.

இது எமக்கு கிடைத்த அரிய சர்ந்தர்ப்பம். மீறினால் தயது தாட்சணியம் இன்றி காணி ஆணையாளர் வழங்கிய அறிவித்தலின் பிரகாரம் காணிகள் பறிமுதல் செய்யப்பட்டு காணிகள் வேண்டுமென்று காத்திருக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு உரிய நிபந்தனையடிப்படையில் உடனடியாக காணிகள் வழங்கப்படும் என்றார்.