வவுனியாவில் பிரமாண்ட சிங்கர் காட்சியறை திறப்பு : அதிரடி சலுகைகள் பல உங்களுக்காக!!

233

 
சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரமாண்ட சிங்கர் பிளஸ் காட்சியறை வவுனியாவில் கடந்த 06.04.2017 அன்று ஹொரவப்பொத்தானை வீதியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

சிங்கர் வவுனியா கிளை முகாமையாளர் உதயகுமார் கஜதீபன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சிங்கர் நிறுவனத்தின் வர்த்தக மற்றும் வணிகப் பணிப்பாளர் மகேஷ் விஜயவர்தன மற்றும் விற்பனை அபிவிருத்தி முகாமையாளர் ரொஹான் பெரேரா பிராந்திய முகாமையாளர் அசங்க விஜயகோன் ஆகியோர் கலந்துகொண்டு காட்சியறையை திறந்து வைத்தனர்.

கஜதீபன் ஆஷவியின் வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து சமய வழிபாடுகள் நடைபெற்று பிரமாண்ட காட்சியறை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

இக் காட்சியறையில் புதுவருட மற்றும் திறப்புவிழா சலுகையில் பல்வேறு வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்களை பெற்றுக்கொள்ளமுடியும்.
தொடர்புகளுக்கு
0242224421