வவுனியா புதிய கற்பகபுரம் அன்னை திரேசா முன்பள்ளியின் மாணவர் திறன்காண் நிகழ்வு நேற்று (10.04.2017) மாலை 3.30 மணியளவில் முன்பள்ளி மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஸ்ரீரெலோ கட்சியின் செயளாளர் நாயகம் ப.உதயராசாவுடன் ஸ்ரீரெலோ இளைஞரணி தலைவர் ப.கார்த்திக் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சங்கரன் சசி மற்றும் முன்பள்ளிகளின் கோட்ட செயலாளர் திருமதி அருள்வேல் நாயகி, கற்பகபுரம் அ.த.க.பாடசாலை அதிபர், தமிழ்விருட்சம் அமைப்பின் செயலாளர் ஜெகன், தாய்மடி நற்பணி நிதியத்தின் தலைவி பிரேமிளா ஆகியோர் கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.