வவுனியாவில் காணாமல்போனோரின் உறவுகளுக்கு புத்தாடைகள் வழங்கிய புலம்பெயர் தமிழன்!!

268

 
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்றுடன் 50வது நாளை எட்டியுள்ளது.

வவுனியா செய்தியாளர் பாஸ்கரன் கதீஷனின் வேண்டுகோளுக்கினங்க கனடா கியூபிக் மொன்றியல் நகரை சேர்ந்த பாராவூர்தி சாரதி ( Truck Driver) ஜனார்தனினால் காணாமல் போன உறவினர்களுக்கு நேற்று (13.04.2017) இருபத்தைந்து புத்தாடைகள் வழங்கப்பட்டது.

இன்று பிறந்துள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தில் நாங்கள் அனைவரும் புத்தாடைகள் அணியும் போது தமது உறவுகளை தொலைத்து நிற்கும் காணாமல் போன உறவுகளும் புத்தாண்டில் புத்தாடைகள் அணிய வேண்டும் என்ற ஒர் எண்ணத்திலேயே இப் புத்தாடைகள் வழங்கப்பட்டன.