வவுனியாவில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு!!

464

 
பாடசாலை செல்லும் வசதியற்ற தரம் 4,6,7,8,9, உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் தாம் பாடசாலைக்கு நடந்து செல்வதாகவும் வசதியற்ற நிலையில் கல்வியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்ததையடுத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் தனது ஊதிய நிதியிலிருந்து ஆறு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.

கனகராஜன்குளம், மாதர்பணிக்கர்மகிழங்குளம், நானாட்டான், பாலமோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனது குருமன்காடு அலுவலகத்தில் வைத்து நேற்று (13.04) காலை 10.30 மணியளவில் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டது

இந்நிகழ்வில் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் திரு. ஜெயகெனடி, மாணவர்களின் பெற்றோர்கள், நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.