புத்தாண்டு தினத்திலும் தமக்கு தீர்வும் இல்லை, நிம்மதியும் இல்லை என தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா கந்தசாமி ஆலய முன்றலில் ஒன்றுகூடி காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு பதில் தா என இறைவனிடம் மன்றாடி அழுது புலம்பி வழிப்பட்ட பின் அங்கிருந்து பசார் வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று வைத்தியசாலை சந்தியை அடைந்து அங்கிருந்து A9 வீதியில் ஊர்வலமாகச் சென்று 50வது நாளாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்ட களத்தை அடைந்தது.
ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்கள் நல்லாட்சி அரசே காணாமல் போனோருக்கு பதில் என்ன, மைத்திரி அரசே எமது பிள்ளைகளுக்கு பதில் கூறு, சம்மந்தன் ஐயா எமது போராடத்திற்கு பதில் என்ன.., நீங்களோ கொண்டாட்டத்தில் நாங்களோ தெருவில், எமது போராட்டம் 50 நாளைக் கடந்து விட்டது தீர்வு என்ன என கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.