வவுனியா மினி சூறாவளி : தடைப்பட்ட A9 வீதி போக்குவத்து!!

322

 
வவுனியா ஈரப்பெரிய குளம் பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்துள்ளதுடன், மினி சூறாவளி தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக வீதியோரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், வீடுகள் சிலவும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், A9 வீதியில் பாரிய மரம் ஒன்று விழுந்துள்ளதாகவும், இதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மரத்தை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.