வவுனியா வைத்தியசாலையில் ஒருவயதுக் குழந்தை சிகிச்சை பலனின்றி மரணம்!!

447

 
வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று (15.04.2017) பிற்பகல் 2.30 மணியளவில் உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா இரணைஇலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த தம்பதிகளுக்கு முதல் குழந்தை கடந்த வருடம் கிடைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் குறித்த பெண் குழந்தைக்கு வைத்தியசாலையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

இக் குழந்தைக்கு பிறந்ததிலிருந்து இருதயம் சரியாக இயங்கவில்லை. இதன் காரணமாக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சத்திரசிச்சை மேற்கொள்ளப்பட்டும் குணமடையவில்லை.

தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று பிற்பகல் 6ம் விடுதியில் குறித்த குழந்தை உயிரிந்துள்ளது.

குறித்த பெண் குழந்தை எதிர்வரும் 22ம் திகதி ஒருவயதினை பூர்த்திசெய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.