வவுனியாவில் கிணற்றில் விழுந்த 3 யானைகள் மீட்பு : அதிகாரியை தாக்க முயன்ற யானை சுட்டுக்கொலை!!

271

 
வவுனியா ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் நேற்று (16.04.2017) காலை 8.30 மணிமுதல் இரண்டு குட்டியானைகளும் இரண்டு பெரிய யானைகளும் கிணற்றிள் வீழ்ந்து உயிருக்குப் போராடி வந்தன.

ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் நான்கு யானைகள் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக வவுனியா ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வன விலங்கு ஜீவரசிகள் அதிகாரிகளுக்கு தகவலை வழங்கினார்கள்.

ஆனால் மாலை 4 மணியாகியும் வன விலங்கு ஜீவராசிகள் சழூகமளிக்காமையினால் பொதுமக்களின் உதவியுடன் ஒமந்தை பொலிஸார் சுமார் 5 மணித்தியாளங்களாக போராடி இரண்டு குட்டி யானைகளை மீட்டெடுத்தனர்.

இதன் போது மீட்டெ டுக்கப்பட்ட குட்டியானையொன்று அவ்விடத்தில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பொதுமக்களையும் தாக்க முற்ப்பட்டது. இதன் போது இருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

எனினும் இரவில் தொடர்ச்சியாக மீட்பு பணியினை தொடர முடியாமையினால் தற்போது இரு பெரிய யானைகளும் கிணற்றினுள் உயிருக்கு போராடிய நிலையில் இம் மீட்புப் பணி இன்று (17.04.2017) காலை தொடர்ந்தது.

இம் மீட்புப் பணியில் மேலும் ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டதுடன் மற்றுமொரு யானை காப்பாற்ற முயன்ற அதிகாரியை தாக்கியதால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அந்த யானை பரிதாபமாக பலியானதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.