வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!!

440

வவுனியாவில் இன்று (17.04.2017) தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டில் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிசார் சடலத்தினை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவனியா வெளிக்குளம் பகுதியில் வசித்துவந்த பி. எம்.சுகுமார் என்ற 61 வயது குடும்பஸ்தர் இன்று காலை 5 மணியளவில் வேட்டியினால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் வீட்டின் முன்பகுதியில் காணப்பட்டுள்ளார்.

இதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார், மரண விசாரணை அதிகாரி சடலத்தினை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தூக்கில் தொங்கியவர் ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பதுடன் நில அளவைத் திணைக்களத்தில் முன்னர் பணியாறிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.