வவுனியாவில் பொலிஸாருக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

436

 
வவுனியாவில் புகையிரதக் கடவை காப்பாளர்கள் தங்களுக்க பொலிசாரால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவித்து வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று (19.04) காலை 10.30 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இப்போராட்டமானது வடக்கு,கிழக்கு புகையிரதக் கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜே.றொகான் ராஸ்குமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிசார் தங்களை அச்சுறுத்தியதாக தெரிவித்து முறைப்பாடு ஒன்றையும் பதிவுசெய்தனர்.

இலங்கை முழுவதும் 3500 ஊழியர்களும் வடமாகாணத்தில் 450 ஊழியர்களும் புகையிரதக் கடவை காப்பாளர்களாக கடந்த நான்கு வருடங்களாக பொலிசாரின் கட்டுப்பாட்டின் கீழ் நாளொன்றுக்கு 250 ரூபா கூலிக்கு கடமையாற்றிவரும் நிலையில் தங்களுக்கு அரசாங்கம் நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 10.04.2017 தொடக்கம் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.