வவுனியாவில் ரயிலில் மோதுண்டு மோட்டார் சைக்கிலில் பயணித்தவர் பலி : அதிர்ச்சிப் படங்கள்!!

437

 
வவுனியா நொச்சிமோட்டைப்பகுதியில் இன்று (20.04) மதியம் 12.35 மணியளவில் ரயிலில் மோதுண்டு குருமன்காடு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

நொச்சிமோட்டை பகுதியிலுள்ள ரயில் கடவையைக் கடக்க முற்பட்டபோது எதிரே வந்த ரயிலில் மோதியதில் மோட்டார் சைக்கிலில் சென்ற குருமன்காடு நகரசபை விடுதியில் வசித்துவந்த நாகலிங்கம் ஜீவராஜ் (ஜீவன்) 47வயதுடைய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

எனினும் மோட்டார் சைக்கிலில் பின்னால் அமர்ந்து சென்ற நபர் சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.