வவுனியாவில் பாம்புக்கடி : பெண் பொலிஸ் உத்தியோகத்தர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்!!

344

வவுனியாவில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் சாஐன் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகி வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் சாஜன்  நேற்றுமுன்தினம் (19.04.2017) மாலை 6.30 மணியளவில் புடையன் பாம்பு கடித்ததில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார்.