வவுனியாவில் பொலிஸாரை மதிக்காமல் சென்ற மோட்டார் சைக்கில் : இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல்!!

529

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் போக்குவரத்து பொலிஸாரை மதிக்காமல் சென்ற இளைஞன் மீது இன்று (21.04.2017) இரவு 10.30 மணியளவில் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியாவிலிருந்து கோவிற்குளம் நோக்கி மோட்டார் சைக்கிலில் இருவர் பயணித்துள்ளனர். இதில் ஒருவர் தலைக்கவசம் அணியவில்லை ஹொரவப்பொத்தானை வீதி றோயல் ஹோட்டலுக்கு அருகே நின்ற போக்குவரத்து பொலிஸார் இவர்களை மறித்துள்ளனர்.

எனினும் பொலிஸாரை மதிக்காமல் அதிவேகமாக தப்பிச் சென்றுள்ளனர். இவர்களை மோட்டார் சைக்கிலில் பின் தொடர்ந்த போக்குவரத்து பொலிஸார் அருந்ததி விடுதிக்கு அருகே வழிமறித்து மோட்டார் சைக்கிலில் பின்பகுதியில் இருந்தவரை தாக்கியுள்ளனர்.

இதனால் பயம் காரணமாக மோட்டார் சைக்கிலின் சாரதி தப்பியோடியுள்ளதாக சம்பவ இடத்திலிருந்தவர்கள் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் பொலிஸாரினால் தாக்கப்பட்ட இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அவ்விடத்தில் சற்று பதட்டமான சூழ்நிலை காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.