வவுனியாவில் கைக்குண்டு மீட்பு!!

355

 
வவுனியாவில் இன்று (23.04.2017) காலை தனது வீட்டின் துப்பரவுப் பணியின்போது காணியிலிருந்து உரிமையாளர் ஒருவர் கைக்குண்டு ஒன்று இருப்பதைக்கண்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

இன்று காலை தனது வீட்டு வேலியை துப்பரவு செய்து கொண்டிருந்த வவுனியா சாந்தசோலை 50வது வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ளவர் பொலித்தீன் பையினால் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு ஒன்று இருப்பதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் கைக்குண்டினை பார்வையிட்டதுடன் நீதவானில் அனுமதி பெற்று விஸேட அதிரடிப்படையினரின் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டு செயலிழக்கச் செய்யவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.