வவுனியாவில் வடமாகாண மட்டத்திலான புதுவருட கொண்டாட்டங்கள்!!

691

 
வவுனியாவில் வடமாகாண மட்டத்திலான புதுவருட கொண்டாட்டங்கள் இன்று (23.04.2017) காலை முதல் வவுனியாவில் நடைபெற்று வருகிறது.

வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை 7.30 மணிக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. றோகண புஸ்பகுமார ஆண்,பெண் இருபாலருக்குமான மரதன் ஓட்டத்தை கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.

நடைபெறவுள்ளன நிகழ்வுகள் வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடனும், வவுனியா மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்புடனும் இடம்பெறவுள்ளது.

அத்துடன் சிங்கள தமிழ் புதுவருடத்தை முன்னிட்டு இலங்கை ரெலிகொம் நிறுவனத்தால் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டுவரும் சைக்கிள் ஓட்டப்போட்டியும் இன்றையதினம் காலை 9.00 மணிக்கு வவுனியா நகரசபைக்கு முன்னால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.