வவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளின் திறண்களை உலகறிய செய்ய கலை இலக்கிய கண்காட்சி மற்றும் விளையாட்டு விழாவை 21.04.2017 தொடக்கம் 22.04.2017 வரை VAROD நிறுவனமானது வவுனியாவில் வெற்றிகரமாக நடாத்தி முடித்திருந்தது.
இதில் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தமது திறமைகளை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தினர்.
விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் அரச, அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.











































