நடிகர் பிரசன்னா- சினேகாவின் மனிதாபிமானம்!!

863

நடிகர் பிரசன்னாவும், சினேகாவும் நலிந்த விவசாயிகளுக்கு நிதியுதவி செய்துள்ளனர். நலிவடைந்த விவசாயிகள், தங்கராஜ், பழனியாண்டி, வெங்கடாசலம் உள்ளிட்ட 10 பேருக்கு 2 லட்சம் நிதியுதவி செய்துள்ளனர்.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைவரும் குரல் கொடுத்து வரும் இவ்வேளையில் பிரசன்னா, சினேகா ஆகியோர் செயலில் இறங்கியதை திரையுலகினர் பாராட்டி வருகின்றனர்.

விஷால் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கடந்த மாதம் டெல்லிக்கு சென்றிருந்தார். பெருமைமிகு தமிழர்கள் விழாவில் நலிந்த விவசாயிகள் 10 பேருக்கு விஷால் உதவியது குறிப்பிடத்தக்கது.