வவுனியாவில் காணாமற்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 27ம் திகதி இடம்பெறவுள்ள முழுக் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரி வர்த்தகர் சங்கத் தலைவரிடம் மனு கையளிக்கப்பட்டுள்ளது.
தமது சங்கத்திலுள்ள உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்ட பின்னர் பதிலினை வழங்குவதாகத் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வர்த்தக சங்கத் தலைவர் தெரிவித்தார்.