இலங்கை இளைஞனின் மகத்தான கண்டுபிடிப்பு : அங்கீகாரம் அளித்த அரசாங்கம்!!

211

இலங்கையில் ஏற்பட்டுள்ள குப்பை முகாமைத்துவ பிரச்சினைக்கு தீர்வாக இளைஞர் ஒருவர் புதிய இயந்திரம் ஒன்றை தயாரித்துள்ளார். குறித்த இயந்திரத்தை மேலும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

திண்ம கழிவுகளை இயந்திர உதவியுடன் துண்டாக்கி ஒதுக்குவதற்காக புதிய இயந்திரம் ஒன்றை கம்பளை, தொழுவ அம்பகும்புர பிரதேசத்திலுள்ள இளைஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட நிபுணர்கள் குழுவொன்று, குறித்த இளைஞரின் வீட்டிற்கு சென்று அவரது நிர்மாணிப்பினை ஆய்வு செய்துள்ளனர்.

இந்த புதிய நிர்மாணிப்பினை முழுமைப்படுத்துவதற்காக அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுப்பதற்கு அமைச்சர் கடிதம் மூலம் உறுதியளித்துள்ளார்.

நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நபர்களுக்கு மதிப்பளித்து அவர்களின் தயாரிப்புகளுக்கு உதவும் நடவடிக்கைகளை தமது அமைச்சு தொடர்ந்து முன்னெடுக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தயாரிப்பினை எதிர்வரும் காலங்களின் நாட்டின் பிரச்சினைக்கு தீர்வாக பயன்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் இதன் போது கூறியுள்ளார்.

இந்த இயந்திரத்தை அபிவிருத்தி செய்வதற்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குமாறு அமைச்சர், பொறியியலாளர்களுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.