வவுனியாவில் வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியலாய தமிழ் சிங்கள புதுவருட நிகழ்வுகள்!!

301

 
இன்று (25.04.2017) காலை 6.30 மணியளவில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான 15 கிலோமீற்றர் சைக்கில் ஓட்டப்போட்டியினை வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தென்னக்கொன் ஆரம்பித்து வைத்தார்.

மரதன் ஓட்டப்போட்டியினை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிரகுமரா ஆரம்பித்து வைத்தார். பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி, முட்டி உடைத்தல், யானைக்க கண் வைத்தல், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் என இடம்பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் இரவு பொலிசாரின் இசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது.