மதுபோதையில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த வயோதிபர் விளக்க மறியலில்!!

265

மது போதையில் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த வயோதிப நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று உத்தரவிட்டுள்ளார்.

காலிமுகத்திடலில் பெண் அமர்ந்திருந்த போது இந்த நபர் பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்தாக குறித்த பெண் கோட்டை பொலிஸ் நிலையத்தின் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

எவ்வாறாயினும் தனது தரப்பு வாதி துஷ்பிரயோகம் செய்யும் எண்ணத்தில் இருக்கவில்லை எனவும் அதிகமான மதுபோதையில் இருந்தால், இந்த சம்பவம் நடந்துள்ளதாக சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.