வவுனியாவில் 27ம் திகதி இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு இ.போ.சபை தொழிற்சங்கம் ஆதரவு!!

763

எதிர்வரும் 27 ஆம் திகதி வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள ஹர்தாலுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை தொழிற்சங்கம் தனது ஆதரவினை வழங்கியுள்ளது.

இரண்டு மாதங்களைக் கடந்த நிலையிலும் காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி, பட்டதாரிகளின் கோரிக்கைக்கு மதிப்பளித்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் என்பவற்றை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன,மத, மொழி பேதங்களைக் கடந்து நடைபெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு நாமும் ஆதரவு வழங்குகின்றோம்.

அன்றைய தினம் நாமும் எமது செயற்பாடுகளை முடக்கி பாதிக்கப்பட்ட அவர்களுக்காக குரல் கொடுப்போம் என அத் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.