வவுனியாவில் நாளை பூரண ஹர்த்தால் : அனைத்து பொது அமைப்புக்களும் ஆதரவு!!

419

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை (27.04.2017) பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் வவுனியாவிலும் நாளை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பபடவுள்ளது. இதற்க்கு பெரும்பாலான பொது அமைப்புக்கள் தமது ஆதரவை தெரிவித்துள்ளன.

2 மாதங்களைக் கடந்து இடம்பெறும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் தொடர் போராட்டத்துக்கு ஆதரவாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தாலை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் பொது அமைப்புக்களின் ஆதரவுடன் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படவுள்ளது.