கார் பயணிகளுக்கு ஓர் எச்சரிக்கை!!

230

 

புதிய வகை கார்கள் நச்சு வாயுக்­களை முழு­மை­யாக வெளி­யேற்றத் தவறி வரு­கின்­றமை புதிய ஆய்­வொன்றில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

காரொன்­றுக்குள் இருக்கும் ஒருவர் ஒரு­த­டவை சுவா­சிக்கும் போது 10 மில்­லியன் நச்சுத் துணிக்­கை­களை சுவா­சிப்­ப­தாக பிரித்­தா­னிய சுரே பல்­க­லைக்­க­ழ­கத்தால் மேற்­கொள்­ளப்­பட்ட மேற்­படி ஆய்வு தெரி­விக்­கி­றது.

குறைந்த காற்­றோட்ட வச­தி­யு­டைய காரில் பய­ணிக்கும் சார­தியும் பய­ணி­களும் வீதி நடை பாதையில் நடக்கும் போது சுவா­சிக்க நேரி­டு­வதை விட 10 மடங்கு அதி­க­மான நச்சுத் துணிக்கைகளை சுவா­சிப்­ப­தாக நச்­சுக்கள் தொடர்­பான பகுப்­பாய்­வா­ள­ரான நிக் மோல்டன் தெரி­வித்தார்.

கார்­களின் இயந்­தி­ரங்­களால் வெளிப்­படும் நச்சுப் புகை சரி­யாக வெளியேற்­றப்­ப­டாது காருக்குள் தேங்­கி­யி­ருப்­பதே மேற்­படி நச்சு துணிக்கைள் தேங்­கு­வ­தற்கு கார­ண­மா­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.

நகர, கிராம வீதி­களில் 4 மணித்­தி­யா­லங்­க­ளுக்கும் அதி­க­மான நேரத்தைக் கழித்த கார்­களில் ஒரு கன சதுர சென்­ரி­மீற்றர் பகு­தி­யி­லுள்ள நச்சுத் துணிக்­கை­களின் அளவு இந்த ஆய்­வுக்­காக அள­வி­டப்­பட்­டது.

உங்கள் கார் வாகன நெரிசலில் சிக்கிக் கொண்ட வேளை அந்தக் காரின் ஜன்னல்கள் மூடப்பட்டிருக்குமானால் காரு

க்குள்ளான நச்சுத் துணிக்கைகளின் செறிவு பல மடங்கு அதிகமாக இருக்கும் என இந்த ஆய்வில் பங்கேற்ற சுரே பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் பொறி யியலாளர் பேராசிரியர் பிரசாந்த் குமார் தெரிவித்தார்.

குறைந்த விலையுள்ள காரொன்றில் ஒரு கன சென்ரிமீற்றரில் காணப்படும் நச்சுத் துணிக்கைகளின் அளவு ஏனையகார்க ளுடன் ஒப்பிடுகையில் பல மடங்கு அதிகமாக உள்ளமை கண்டறிய ப்பட் டுள்ளது. வளிமண்டல நச்சு காரணமாக வரு டாந்தம் 40,000 பேர் முன்கூட்டியே மரணத்தைத் தழுவுவதாக விஞ்ஞானிகள் தெரி விக்கின்றனர்.