நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு : சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்!!

243

 
வடக்குகிழக்கு பகுதிகளில் நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்குமாறும் காணமற்போன உறவினரின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் அவர்களின் உறவுகளைக்கண்டு பிடிக்கவும் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாடுகளுக்குமான ஒருமித்த கருத்தினை வெளிப்படுத்துவதுடன்,

அழுத்தத்தினை வழங்குவதற்கு காணாமற்போன உறவுகளின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி அவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குமாறு இன்று (26.04.2017) காணாமற்போன உறவுகளைச் சந்தித்து மேலதிக காணாமற்போன உறவுகளின் விபரங்களையும் பெற்றுக்கொள்ளச் சென்று கலந்துரையாடிய வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

இவருடன் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் சென்றிருந்தனர்.