வவுனியா வேப்பங்குளத்தில் இன்று (26.04.2017) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கில் விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
நெளுக்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணத்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கில் ( எல் போட் பொருத்திய) முச்சக்கரவண்டியினை முந்திச் செல்ல முற்ப்ட்டது. இதன்போது மோட்டார் சைக்கில் முச்சக்கரவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதியும் மோட்டார் சைக்கிலில் பயணித்தவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.