வவுனியா பேருந்து நிலையத்தில் மக்களுக்கு இடையூறு செய்த வயோதிபர் பொலிசாரால் மீட்பு!!

240

 
வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் இருந்த வயோதிபர் ஒரவர் நேற்று (26.04.2017) மாலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்று (26.04.2017) மாலை மத்திய பேருந்து நிலையத்தில் வயோதிபர் ஒருவர் வியாபார நிலைய கட்டடத்தொகுதியில் அமர்ந்திருந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

இதையடுத்து பொலிசாரின் அவசர தொலைபேசி அழைப்பிற்கு அழைப்பு ஏற்படுத்தப்பட்டு தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று வயோதிபரை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியதுடன் சுகயீனமுற்று இருப்பதாகத் தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.