இராணுவச் சிப்பாயின் மனைவியை 10 பேர் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கொடுமை!!

363

கம்பளை சின்ஹாப்பிட்டிய பிரதேசத்தில் அங்கவீனமான இராணுவ சிப்பாய் ஒருவரின் மனைவியை, சிப்பாயின் நண்பர்கள் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் நடந்துள்ள போதும், குறித்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் காணொளிக் காட்சிகள் தற்போது இணையத்தளத்தில் வெளியாகியுள்ள.

இதன் காரணமாக குறித்த சம்பவம் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 10 பேர் இணைந்து பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்தை எதிர்நோக்கிய பெண், தனது உறவினர்கள் மூலம் சம்பவம் நடந்த சில தினங்களுக்குப் பின்னர் சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதனையடுத்து சந்தேகநபர்கள் நீண்டகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

எனினும் பிணையில் விடுதலையாகியுள்ள குறித்த சந்தேகநபர்கள் பெண்ணை பழிவாங்குவதற்காக காணொளியை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபர்கள் 10 பேருக்கும் சம்பவத்தில் தொடர்புள்ளதா என்பதை கண்டறிய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசேட பொலிஸ் குழுவை நியமித்துள்ளது.