தென் கொரியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் தற்கொலை?

221

தென் கொரியாவில் அண்மையில் ஏரி ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் இலங்கையைச் சேர்ந்த ஒருவருடையது என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

தொழில் வாய்ப்பை பெற்று தென் கொரியாவுக்கு சென்ற இலங்கை இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இலங்கையரின் சடலம் என சந்தேகிக்கப்படும் குறித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டிருக்க கூடும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞர், உயரமான மலை பகுதி ஒன்றுக்கு சென்று குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்க கூடும்.

இருப்பினும், உயிரிழந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பத்தேகம பகுதியைச் சேர்ந்த சஷேன் தாரக ஜயசேகர என்ற இலங்கை இளைஞரே காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.