ரகசிய தகவல் வழங்கியவர் மர்ம மரணம்!!

238

சட்ட விரோதமான முறையில் மணல் ஏற்றி;ச் செல்லும் லொறியொன்றை பொலிஸாரிடம் சிக்கவைத்த ரகசிய தகவல் வழங்கும் ஒருவர் மர்மமான முறையில் மரணமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் துரித விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கருவலகஸ்வௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் புத்தளம் – தப்போவ- பாவட்டாமடுவைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

நேற்று மாலை (27) கருவலகஸ்வௌ – தப்போவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர், பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸாருக்கும், அரச நிறுவனங்களுக்கும் ரகசியமாக அறியத் தருபவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று அவரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய பொலிஸார் கருவலகஸ்வௌ பகுதியி;ல் சட்டவிரோதமாக மணல் ஏற்ற முயன்ற லொறியொன்றை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.