புகையிரதம் மோதி ஒருவர் பலி!!

231

 
திராய்மடுவில் பகுதியில் இளைஞர் ஒருவர் புகையிரதம் மோதி பலியாகியுள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து, கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் திராய்மடுவில் வைத்தே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் ஏறாவூர் புகையிரத நிலையத்துக்கு கொண்டு செல்லபட்டுள்ளது.

புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளவரின் விவரம் தெரியாதமையினால், இது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது போன்னு புகையிரத வழித்தடங்களில் யாரேனும் புகையிரதத்தில் மோதுண்டு இறந்தால், இறந்தவரின் சடலத்தை அடுத்த புகையிரத நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் விபத்தில் பலியானவரில் சடலம் ஏறாவூர் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.