வவுனியாவில் 64வது நாளாகத் தொடரும் போராட்டம்!!

241

 
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 64வது நாளாகவும் இன்று (28.04.2017) தொடர்கிறது.

குறித்த போராட்டம் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இப் போராட்டத்திற்கு ஆதரவாக வவுனியாவில் நேற்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.