சமூக விழிப்பணர்வுக்கான மக்கள் அமைப்பினரின் பிரதான மேதினம் மாங்குளத்தில்!!

418

சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் பிரதான மே தினம் வடக்கின் தலைநகர் மாங்குளத்தில் நடைபெறவுள்ளதாக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நா.தேவகிருஸ்ணன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்​,

ஆளும் தேசிய கூட்டரசே பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் கூறு, அரசியல் கைதிகளை விடுதலை செய், வட மாகாணத்தின் தலைநகரமான மாங்குளத்தில் மாகாணசபையின் அதிகார மையத்தை நிறுவு,
பெண்களின் வாழ்க்கையை சிதைக்கும் நுண்கடன் கம்பனிகளை உடனே இழுத்து மூடு, மலையக மக்களுக்கான காணி உரிமையை வழங்கு,

போன்ற பிரதான கோசங்களுடன் வவுனியா மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் பரட்சிகர மேதினமானது வடக்கின் தலைநகர் மங்குளத்தின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு முன்பாக 2.30 மணிக்கு பேரணி தொடங்கப்படுவதுடன் மாங்குளம் மகாவித்தியாலயத்தின் மைதானத்தில் மாலை 3.00 மணிக்கு பொதுக் கூட்டம் நடைபெறும்.

மே தினத்தை புரட்சிகர எழுச்சி நாளாக கருதி உழைக்கும் தொழிலாளர் மற்றும் விவசாயிகளை அணி திரளுமாறு சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நா.தேவகிருஸ்ணன் அழைப்பு விடுத்தார்.

நிகழ்வில் சமூக விழப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் செயலாளர் ரி.தேவசாந்தன், வவுனியா மாவட்ட அமைப்பாளர் அயூப்கான், வவுனியா மாவட்ட ஊடக பேச்சாளர் எஸ்.சதீஸ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.