முதலைக்கு இரையான சிறுமி!!

261

 
கல்னேவ பொலிஸ் பிரிவில் முலன்நட்டுவ குளத்தில் நீராடிக்கொண்டிருந்த 13 வயதான சிறுமியை முதலை இரையாக இழுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்னேவ மத்திய மகா வித்தியாலயத்தில் 7 தரத்தில் பயிலும் கோலுகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த எஸ்.எம்.கிமிஹானி அனுஷிகா என்ற சிறுமியை இவ்வாறு முதலைக்கு இரையாகியுள்ளார்.

சிறுமி எதிர்வரும் மே 2ஆம் திகதி பிறந்த நாளை கொண்டாடவிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வழமைப் போல் பெற்றோர் மற்றும் அயலவர்களுடன் நேற்றிரவு 7 மணியளவில் முலன்நட்டுவ குளத்தில் சிறுமி நீராடிச் சென்றுள்ளார்.

குளித்து கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார். சிறுமி காணாமல் போன இடத்தில் நீர் குமிழிகள் வெளிப்பட்டதாக சிறுமியின் தாய் கூறியுள்ளார்.

முதலை இழுத்துச் சென்ற சிறுமியின் உடலை தேடும் பணியில் கடற்படை சுழியோடிகள், பொலிஸ் உயிர்காப்பு பிரிவு, சிவில் பாதுகாப்பு படையினர், பிரதேச வாசிகள் இணைந்து தேடி வருகின்றனர்.