கூறிய ஆயுதங்களினால் தாக்கப்பட்ட நிலையில் ஆண்கள் இருவர் கொலை!!

234

தலவத்துகொட, மாதிவெல வீதியில் வீடொன்றுக்கு முன்னால் வெட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய இன்று காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அத்துருகிரிய – ஒருவல வீதி, மஹஜன மாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விஷேட பொலிஸ் குழுவொன்று மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதேவேளை மீகஹவத்தை, அகுருமுல்ல, தெல்கொட பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி தனது கணவரை கொலை செய்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவரிடையேயும் ஏற்பட்ட வாய்தர்க்கம் தீவிரமானதே இக்கொலைக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த கணவருக்கு 28 வயது என்று தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டு கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.