கிளிநொச்சியில் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை!!

332

கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்து நடத்துனரான கணேசமூர்த்தி கலைச்செல்வன் (34) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போது, குடும்பப் பிணக்கே இந்த தற்கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

எனினும் தாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருதாக அவர்கள் கூறியுள்ளனர். இதேவேளை, சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மைய நாட்களாக இலங்கையில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.