வவுனியா மன்னார் வீதியில் விபத்து : இருவர் படுகாயம்!!

230

 
வவுனியா பட்டானிச்சூர் பாடசாலைக்கு அருகே இன்று (29.04.2017) காலை 8 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த கனரக வாகனத்தினை பட்டானிச்சூர் பாடசாலைக்கு அருகே அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கில் முந்திச்செல்ல முற்ப்பட்டது.

முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கில் மன்னார் வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கில் மீது கனரக வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திவந்தவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.