இரவு விடுதியில் மோதல் : கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞன்!!

259

தலங்கம பகுதியிலுள்ள இரவுநேர விடுதியில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள இரவு நேர விடுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துருகிரிய மஹஜன மாவத்தையை சேர்ந்த எல்லகொட கமகே இசுரு சம்பத் எனப்படும் லொக்கு பர்டி என்ற 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியாக செயற்படும் குறித்த இளைஞர் கடந்த 27ஆம் திகதி இரவு நண்பர்களுடன் தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள இரவு நேர விடுதிக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், அங்கு ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியமையினால் அதிகாலை 3.10 மணியளவில் விடுதியை விட்டு வெளியே வந்த சந்தர்ப்பத்தில் சிலரினால் கூர்மையான ஆயுதத்தில் அவரது ஒரு கால் வெட்டப்பட்டுள்ளது.

ஒன்றைக் காலுடன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கு முயற்சித்த போது அவரை துரத்தி சென்று மற்றைய காலை வெட்டி எடுத்துள்ளனர்.

காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பழைய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சில குழுக்களினால் இந்த இளைஞர் இரவு நேர விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டு இவ்வாறு வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்ற நிலையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பிரிசோதனை இடம்பெறவுள்ளது.