உலக தொழிலாளர்கள் தினத்தினை அனுஷ்டிப்பதற்காக அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை வழங்குவதாக வவுனியா வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது.
வவுனியாவிலுள்ள வியாபார நிலையங்களில் பணிபுரிகின்ற அனைத்துத் தொழிலாளர்களுக்கு நாளை (01.05) விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இதனடிப்படையில் வவுனியாவிலுள்ள அனைத்து வியாபார நிலைய உரிமையாளர்களும் தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.