மனைவியுடன் சண்டை : வீட்டுக்கு தீமூட்டிய கணவன்!!

468

 

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டுக்கு தீ வைத்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு காத்தான்குடியில் நடந்துள்ளது.

மனைவியுடன் நேற்றிரவு ஏற்பட்ட மோதல் காரணமாக ஆத்திரமடைந்த சந்தே நபர் வீட்டுக்கு தீ மூட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை கைது செய்துள்ள காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.