வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலி!!

405

ஹொரணை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பிறிதொரு வாகனத்துடன் குறித்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் வாகனம் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தையடுத்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

விபத்தில் 19 மற்றும் 20 வயதுடைய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர் என்றும், சம்பவம் தொடர்பில் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை அவரை இன்று ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.