தாயால் கங்கையில் தூக்கி வீசப்பட்ட சிறுவனின் சடலம் மீட்பு!!

281

கடுவலை பாலத்தில் இருந்து களனி கங்கையில் தாயால் தூக்கி வீசப்பட்ட குழந்தையின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று காலை கடுவலை பாலத்திற்கு அருகில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  மேலும், சம்பவத்தில் பலியானவர் ஆறு வயதான சிறுவன் எனத் தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்யும் நோக்குடன் குறித்த தாய் கடுவலை பாலத்தில் இருந்து சிறுவனுடன் கங்கையில் குதித்துள்ளார்.
எது எவ்வாறு இருப்பினும், அங்கிருந்தவர்கள் தாயை காப்பாற்றியுள்ளனர்.

மேலும், தாய் பியகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.