வத்தளையில் நடுவீதியில் தீக்கிரையான கார்!!

511

வத்தளை, நீர்கொழும்பு வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது கார் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த விபத்தின் போது ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.